Saturday, May 8, 2021

Om Sri Sai Ram in Tamil




 அன்பு குழந்தையே..


🌻நான் உன்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் நான் உன்னுடன் எப்போதும் இருப்பதற்காகவும் நீ இருக்கும் திசை நோக்கி வந்து விட்டேன்..


🌻நான் எங்கும் வியாபித்து இருப்பேன். உனக்கு ஏற்பட்டு இருக்கும் தற்போதைய நிலை மாற போகிறது. உனது பாரத்தை முழுவதுமாக நான் சுமந்து கொண்டு  இருக்கிறேன்..


🌻உனக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண் டும் என்று  ஒரு நாளும் தவறாமல்  யோசித்து யோசித்து உனக்கு வழங்கி கொண்டு இருக்கிறேன்.. 


🌻நீ விரும்பிய வாழ்க்கையை உனக்கு வழங்க போகிறேன் மகிழ்ச்சியாக இரு எதை பற்றியும் கவலை படாமல் என்னை நினைத்து என்னை பின்பற்றி இரு.. 


🌻உனக்குள் இருக்கும் அத்தனை துயரங்களின் பிடியில் இருந்தும் விரைவில் நிவாரணம் வழங்க போகிறேன். யாரிடமும் வெறுப்போ விவாதமோ வேண்டாம்..


🌻எத்தனையோபேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு என்னிடம் வந்து இருக்கிறார்கள். தயவு செய்து நீ கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கற்றுக் கொள் எதிர்த்து போராடு.. 


🌻உனது வாழ்க்கையும் உனது குடும்பமும் செழிப்பாக இருப்பதற்காக நான் உன் கூடவே  இருப்பேன். நீ சந்திக்காத விளைவுகள் இல்லை..


🌻கவலை படாதே, நான் இருக்கிறேன். உனக்கா ன பொன்னான நேரம் உன்னை நெருங்கி கொண்டு இருக்கின்றது. அதுவரை காத்திரு பொறுமையாக இரு..


ஓம் ஸ்ரீ சாய் ராம்..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment